English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

பாவனையாளர் அறிவூட்டல்

அதிகாரசபையின் பிரதான தொழிற்பாடுகளில் ஒன்று, சுகாதாரம், பாதுகாப்பு, பாதுகாப்பளித்தல் பாவனையாளர் உரிமைகள் மற்றும் கடமைகள் மீதான பாவனையாளரின் அறிவினை மேம்படுத்துவதேயாகும். இச் சேவையின் கீழ் பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டன.

  • பாடசாலை மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
  • பாடசாலைகளுக்கிடையிலான சித்திர, கட்டுரை மற்றும் நாடக போட்டிகள்
  • பாடசாலை மாணவர்களுக்கிடையில் “உங்களுக்குத் தெரியுமா” எனும் நாடளாவிய போட்டியினை நடாத்துதல்
  • பாவனையாளர் வைபவ ரீதியிலான நிகழ்ச்சித்திட்டங்கள்
  • வெகுஜன தொடர்பு சாதனங்களின் மூலமாக அறிவினைப் பரப்புதல்

பாவனையாளர்களின் துயர்களை உடனடியாக துடைக்கும் வகையில், பாவனையாளர்களுக்கு அறிவூட்டும் நோக்கில் பாவனையாளர் சங்கங்களை தாபிப்பது அதிகாரசபையின் முக்கியமான நடவடிக்கையாக அமைகின்றது. இது பொது நலன்களைப் பாதுபாப்பது தொடர்பில் பாவனையாளர்கள் குரல் கொடுக்கும் நோக்கில் பாவனையாளர்களுக்கு வலுவூட்டுவதனை நோக்காகக் கொண்டது. பாவனையாளர் அமைப்புக்களை தாபிப்பதனை மேம்படுத்துகின்ற, உதவியளிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற எத்தரப்பிற்கும் அதிகாரசபையானது தனது முழுமையான ஆதரவினை வழங்கும்.

 

புதுப்பிக்கப்பட்டது: 13-03-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.