பாவனையாளர்அலுவல்கள்அதிகாரசபையானது, வெசாக் பண்டிகையின் போது அலங்காரத் தேவைகளுக்காக பயன்படுத்தும் மின்சார உபகரணம், மின்குமிழ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பாவனையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தவிசாளர் கலாநிதி. லலித் செனவீர அவர்கள், வெசாக் பண்டிகை காலப்பகுதியில் தரமல்லாததும் உத்தரவாதமில்லாதுமான மின்சார உபகரணங்கள், வயர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அலங்காரப் பொருட்களினை விற்பனை செய்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகளவில் காபணப்படுவதாக சுட்டிக் காட்டுகின்றார்.
அவர் வெசாக் பண்டிகையின் போது அலங்காரத் தேவைகளுக்கான மின்சாரப் பொருட்கள் மற்றும் அவை சாரந்த துணைப் பொருட்களினைக் கொள்வனவு செய்யும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
அனைத்து மின்சார மற்றும் இலத்திரனியல் பொருட்களினையும் விற்பனை செய்யும் போது அவற்றின் அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வழங்குனர்களும் குறித்த பொருட்கள் விற்பனை செய்யயப்படும்அல்லது கொள்வனவாளருக்கு அத்தகைய பொருட்கள் உரிமையாகும் திகதியிலிருந்து ஆகக் குறைந்தது ஆறு மாத காலப்புதிக்குக் குறையாத உத்தரவாத காலப்பகுதியினைக் கொண்டிருப்பதனையும் அத்தகைய பொருட்களின் உத்தரவாதச் சான்றிதழ்களின் நிபந்தனைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இருப்பதனையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
இது தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது 011-7755481 அல்லது 1977 எனும் அதிகாரசபையின் தொலைபேசி இலக்கங்களினூடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறியத்தருமாறு பொதுமக்களைக் கேட்டு்க் கொள்கின்றது.
கலாநிதி.லலித் என்.செனவீர,
தவிசாளர்