அதிகாரசபையின் பிரதான தொழிற்பாடுகளில் ஒன்று, சுகாதாரம், பாதுகாப்பு, பாதுகாப்பளித்தல் பாவனையாளர் உரிமைகள் மற்றும் கடமைகள் மீதான பாவனையாளரின் அறிவினை மேம்படுத்துவதேயாகும். இச் சேவையின் கீழ் பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டன.
பாவனையாளர்களின் துயர்களை உடனடியாக துடைக்கும் வகையில், பாவனையாளர்களுக்கு அறிவூட்டும் நோக்கில் பாவனையாளர் சங்கங்களை தாபிப்பது அதிகாரசபையின் முக்கியமான நடவடிக்கையாக அமைகின்றது. இது பொது நலன்களைப் பாதுபாப்பது தொடர்பில் பாவனையாளர்கள் குரல் கொடுக்கும் நோக்கில் பாவனையாளர்களுக்கு வலுவூட்டுவதனை நோக்காகக் கொண்டது. பாவனையாளர் அமைப்புக்களை தாபிப்பதனை மேம்படுத்துகின்ற, உதவியளிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற எத்தரப்பிற்கும் அதிகாரசபையானது தனது முழுமையான ஆதரவினை வழங்கும்.
முறையான சந்தை ஆராய்ச்சி இல்லாமல் பொருளாதாரத்தில் போட்டி நிலையினை மதிப்பீடு செய்ய முடியாது. பல்வேறு பொருட்கள் சேவைகளின் சந்தை நிலைமைகளுடன் தொடர்புடைய தகவல்களை வழங்குவதற்கான அறிக்கைகளை ஆய்வு செய்து பிரசுரிப்பதற்கான அதிகாரமானது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு உரித்தளிக்கப்பட்டுள்ளது. அதிகாரசபையானது, பொதுவான பாவனையாளர் விடயங்கள் அவ்வாறே பல்வேறுபட்ட வர்த்தகர்களுடன் தொடர்புடைய போட்டி நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது. பொதுவாக, இத்தகைய சந்தை ஆராய்ச்சிகள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்படும்:
இத்தகைய ஆய்வுகளின் காண்புகளின் அடிப்படையில், உரிய சந்தைகளில் போட்டியினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போட்டி எதிர் புலனாய்வுகளுக்கு சந்தைப் பங்குகள், நெகிழ்வுகள், சந்தை வலு குறிகாட்டிகள் போன்ற சந்தை சூழ்நிலையின் பல்வேறு அளவீடுகளிலான ஆதரவு தேவைப்படுகின்றது. ஆகையால், முறையான அடிப்படையில் பாரிய சந்தைகளிலுள்ள போட்டி சூழ்நிலையினை மதிப்பீடு செயவதற்கும் கண்காணிப்பதற்கும் தேவையானதரவுத் தளத்தினை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
This page is under construction
பணிப்பாளர்,
போட்டி ஊக்குவிப்பு,
பாவனையாளர் அலுவல்கள் அதிகாசபை,
இல.27, வொக்ஸோல் வீதி,
கொழும்பு 02.
அதிகாரசபையானது, அதிகாரசபையினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் மற்றும் பணிப்புரைகளுடன் வியாபாரிகள் இணங்கி நடக்கின்றார்களா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குற்றங்களுடன் தொடர்புடைய வர்த்தகம் மீது திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய திடீர் சோதனைகளின் மூலம் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இச்சோதனைகளின் போது கைது செய்யப்படும் குற்றமிழைத்தவர்களும் பொருட்களும் நீதிமன்றத்தில் கையளிக்கப்படுவதுடன் குற்றமிழைத்தவர்கள் பாஅஅ சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக தண்டிக்கப்படுவார்கள்.